Blog Archives

மோடி ஆட்சியில் ஊழல்!! அன்னா ஹஸாரேவுக்கு அழைப்பு!

Narendra Modi - more than one lakh crore Corruption

ஏப்ரல் 12, அஹ்மதாபாத்: குஜராத் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா அம்மாநிலத்தை ஆளும் மோடி அரசுக்கெதிராக ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ள காந்தியவாதி அன்னா ஹஸாரேவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் ஊழல் ஆட்சியாளர்களை விசாரணைச் செய்யும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

பின்னர் அவர் பேட்டியளிக்கையில், அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். இதனை கருத்தில் கொண்டு குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் மோதிவாடியா அன்னா ஹஸாரேவை குஜராத் மாநிலத்தில் ஊழலை எதிர்த்து பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

இதுக்குறித்து அவர் மேலும் கூறியதாவது: “நரேந்திர மோடியின் அரசு ஒரு லட்சம் கோடி ஊழல் புரிந்துள்ளது. இந்த ஊழல் கடந்த பத்தாண்டுகளாக குஜராத்தை மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிபுரியும் வேளையில் நடந்ததாகும்.

சுஜ்லாம் சுஃப்லாம் யோஜ்னா திட்டத்தில் ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. டாட்டாவின் நானோ கார் திட்டத்திற்கு அனுமதியளித்ததால் அரசுக்கு 31 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பிபபாவ் பவர் நிறுவனம் மற்றும் ஸ்வான் எனர்ஜி நிறுவனத்திற்கும் குஜராத் அரசுக்கும் இடையே நடந்த ஒப்பந்தத்தின் வாயிலாக 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அன்னா ஹஸாரே லோக்பால் மசோதாவுக்காக போராடினார். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக மோடி அரசு ஆட்சியாளர்களின் ஊழலை விசாரிக்கும் ‘லோகாயுக்தா’வை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இவ்வாறு மோத்வாடியா தெரிவித்துள்ளார்.

லோகாயுக்தாவை நியமித்தால் தனது ஊழல் சந்தி சிரிக்கும் என பயந்துதான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருந்து வருகிறார் மோடி. சொந்த நாட்டு குடிமக்களான பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்வதற்கு தலைமை வகித்த மோடி, தற்பொழுது அம்மாநிலத்தில் முஸ்லிம்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்திவருகிறார்.

மாநிலத்தை கொள்ளையடிப்பதிலும், குடிமக்களை கொலைச்செய்யத் தூண்டுவதிலும் கைத்தேர்ந்த மோடி தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் வேளையில் ஊழலைக் குறித்தும், குடும்ப ஆட்சியைக் குறித்தும் ரொம்பவே அலட்டிக்கொண்டார்.

வேதம் ஓதுவது கேடுகெட்ட சாத்தான் என்பது தமிழ வாக்காளர்களுக்கு தெரியாதா என்ன?
அஹ்மதாபாத்: குஜராத் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா , அம்மாநிலத்தை ஆளும் மோடி அரசுக்கெதிராக ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ள காந்தியவாதி அன்னா ஹஸாரேவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் ஊழல் ஆட்சியாளர்களை விசாரணைச் செய்யும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார். பின்னர் அவர் பேட்டியளிக்கையில், அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.

இதனை கருத்தில் கொண்டு குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் மோதிவாடியா அன்னா ஹஸாரேவை குஜராத் மாநிலத்தில் ஊழலை எதிர்த்து பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் மேலும் கூறியதாவது: “நரேந்திர மோடியின் அரசு ஒரு லட்சம் கோடி ஊழல் புரிந்துள்ளது. இந்த ஊழல் கடந்த பத்தாண்டுகளாக குஜராத்தை மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிபுரியும் வேளையில் நடந்ததாகும்.

சுஜ்லாம் சுஃப்லாம் யோஜ்னா திட்டத்தில் ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. டாட்டாவின் நானோ கார் திட்டத்திற்கு அனுமதியளித்ததால் அரசுக்கு 31 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பிபபாவ் பவர் நிறுவனம் மற்றும் ஸ்வான் எனர்ஜி நிறுவனத்திற்கும் குஜராத் அரசுக்கும் இடையே நடந்த ஒப்பந்தத்தின் வாயிலாக 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அன்னா ஹஸாரே லோக்பால் மசோதாவுக்காக போராடினார். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக மோடி அரசு ஆட்சியாளர்களின் ஊழலை விசாரிக்கும் ‘லோகாயுக்தா’வை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இவ்வாறு மோத்வாடியா தெரிவித்துள்ளார். லோகாயுக்தாவை நியமித்தால் தனது ஊழல் சந்தி சிரிக்கும் என பயந்துதான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருந்து வருகிறார் மோடி.

சொந்த நாட்டு குடிமக்களான பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்வதற்கு தலைமை வகித்த மோடி, தற்பொழுது அம்மாநிலத்தில் முஸ்லிம்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்திவருகிறார். மாநிலத்தை கொள்ளையடிப்பதிலும், குடிமக்களை கொலைச்செய்யத் தூண்டுவதிலும் கைத்தேர்ந்த மோடிர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் வேளையில் ஊழலைக் குறித்தும், குடும்ப ஆட்சியைக் குறித்தும் ரொம்பவே அலட்டிக்கொண்டார். வேதம் ஓதுவது கேடுகெட்ட சாத்தான் என்பது தமிழ வாக்காளர்களுக்கு தெரியாதா என்ன?

SOURCE:SINTHIKKAVUM

பெரியார் பார்வையில் இஸ்லாம் (அ) ஏகத்துவம்

(’இஸ்லாம்’ பற்றி பகுத்தறிவு கொள்கை கொண்ட பதிவர்கள் சிலரின் மதிப்பீடுகளை-பின்னூட்டங்களை தமிழ்மணத்தில் படித்துவிட்டு -பகுத்தறிவு தந்தையின் மதிப்பீடு என்னவென்று தேடியபோது கிடைத்ததை மீள்பதிவு செய்திருக்கிறேன்).

சகோதரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகி விட்டதால், அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு “மோட்ச லோகம்’ கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, “கடவுளோடு கலந்து விட்டார்கள்’ என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை. அன்றியும், ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை.
இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும், முமகமதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும், மதத்தின் காரணமாக கருதுவது மூடநம்பிக்கையே ஒழிய, இரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை. உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால், பாவபுண்ணியத்தையும், மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை.

மற்றென்னவென்று கேட்பீர்களேயானால், இந்து மதம் என்பதிலிருந்து மதம்மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான மிருகப்பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும்சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.

அதாவது, மேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை “சாமி, சாமி, புத்தி’ என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.

வண்ணான், நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும், கரடிபோல் மயிர் வளர்த்துக் கொண்டும், பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழவேண்டியதில்லை. இனி எந்த பொதுத் தெருவிலும் நடக்கலாம்; எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மத சம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போக தாராள உரிமை உண்டு; வேதம் படிக்க உரிமையுண்டு.

எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு விடுதலை அடைந்து விட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனெனில், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.

ஆகையால், தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கியவேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணியமானதுமான அபிப்பிராயம்.

நிற்க. சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?

ஆகையால், இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும்வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் முகமதியர் ஆவதைத் தவிர வேறு மார்க்கமில்லையாதலால், நாம் அதை ஆட்சேபிக்க முடியாதவர்களாய் இருக்கின்றோம். தவிரவும், மதத்தினிடத்திலோ இந்து சமூகத்தினிடத்திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால், அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கு இருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன்வரட்டும். அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறேன்.

நன்றி: http://www.keetru.com/rebel/periyar/12.php

ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்!
நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்’ என்றுசொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது “ஆத்மார்த்தத்திற்கோ’ “கடவுளை அடைவதற்கோ’ நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.
(சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று தந்தை பெரியார் ஆற்றிய உரை. ‘குடி அரசு’ 2.8.1931) 

நன்றி: http://www.keetru.com/rebel/periyar/10.php

 

Elangakurichy on Kumudam Article

சவூதி, சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா என வீட்டிற்கு ஒருவராவது வெளிநாட்டில் வேலை பார்க்கும் சிறப்பு இளங்காக்குறிச்சி கிராமத்திற்கு உண்டு. அதைவிட இன்னொரு சிறப்பு தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமே வாழும் கிராமம் இது என்பதுதான். திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்திருக்கும் பச்சைப்பசேல் மலை அடிவார கிராமம் என்பது கூடுதல் சிறப்பு.
ஒரு காலத்தில் புகையிலை விற்பனைதான் இவர்களின் தொழிலாக இருந்திருக்கிறது. இன்று விவசாயம், செங்கல் சூளை, சுண்ணாம்புக் கால்வாய், மிட்டாய் கம்பெனி, காண்ட்ராக்ட், வெளிநாட்டு வேலை என்று இளங்காக்குறிச்சிக்கு முகங்கள் பல. கூலி வேலையில் தொடங்கி டாக்டர், இன்ஜினீயர் வரை பல்வேறு விதமான விருப்ப வேலைகளை உள்ளூரிலேயே பார்க்கின்ற ஆண்களையும் காண முடிகிறது.

பெண்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை. அதே சமயம், கணவரது வருமானத்தை மட்டும் சார்ந்தும் இருப்பதில்லை.
‘‘எங்களால் இயன்ற தையல், திருப்பூரிலிருந்து வரவழைக்கப்படும் பனியன் துணியிலிருந்து நூலெடுத்தல், ஆடு கோழி வளர்த்தல் என பல்வேறு விதமான வேலைகளையும் நாங்களே உருவாக்கிக் கொள்கிறோம்” என்கிறார் சையது மீரா ஜானு.

மேலும், ‘‘எங்க ஊர்ல பெண்களோட கர்ப்ப காலம் மட்டும்தான் ரொம்பவே சிரமமான ஒண்ணு. துணை சுகாதார நிலையம்தான் இருக்கு. அதிலும் மருத்துவர்களே இல்லாததால் மருத்துவமனையை பத்திச்  சொல்ல வேண்டியதே இல்லை. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏதாவதொரு ஆத்திர அவசரம்னா வையம்பட்டிக்குதான் தூக்கிட்டு ஓட வேண்டியிருக்கு” என்கிறார்.

‘‘புகையிலைத் தொழில் நசிஞ்சு போன பிறகு மிட்டாய் கம்பெனிகள் தான் எங்களுடைய வாழ்வாதாரமா இருக்கு. கடலைமிட்டாய், மைசூர்பாகு, தேன்மிட்டாய்னு ஊரைச் சுத்தி நிறைய மிட்டாய் கம்பெனிகள் இருக்கு” என பரவசப்படுகிறார் அப்துல் மாலிக்.

சையது பீவி என்கிற எண்பது வயது மூதாட்டியோ, ‘‘பெண்கள் ஐந்து வேளையும் தொழுவது என்பது எங்களிடையே காலங்காலமாக உள்ள பழக்கம். பெரும்பான்மையான பெண்கள் சுயதொழில்களை உருவாக்கிக் கொள்வதால் வீட்டிற்கு வெளியே பார்ப்பது என்பது மிகவும் அரிது. இதனால் தெருக்களும் எப்போதும்  வெறிச்சோடித்தான் இருக்கும்” என்றபடி தொழுகையில் ஈடுபடுகிறார்.

சாலிஹா பீவிக்கு வயது நூற்றுப் பத்து! மகன், மகள், பேரப்பிள்ளைகள், அவர்களின் குழந்தைகளென இவர் வீட்டில் மட்டும் மொத்தம் எண்பது பேர். ஆனால், மூதாட்டியோ இந்த வயதிலும் சோர்ந்து விடாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். பனியன் துணியிலிருந்து நூல் பிரிக்கிறார். நுட்பமான வேலையை நுணுக்கமாகச் செய்கிறார்.

‘‘இளங்காக்குறிச்சியில் மதப் பிரச்னை என்ற வார்த்தைக்கே இடம் இல்லை”யென தீர்க்கமான பெருமிதத்தோடு தொடங்குகிறார் முகமது யாகூப்.

‘‘சுத்துப்பட்டுல இருக்கிற எல்லா ஊர்க்காரங்களோடும் ரொம்பவே இணக்கமா இருக்கிறோம். எல்லாரும் ஒரே தாய்ப் புள்ளையாதான் பழகுகிறோம். பங்காளி, மாப்ளைன்னு முறை வச்சுக் கூப்பிடுறோம். அவங்க வீட்டு விசேஷத்து நாங்க போறதும் எங்க வீட்டு விசேஷத்துக்கு அவங்க குடும்பத்தோட வர்றதும், ரம்ஜான், பக்ரீத் பண்டிகளைப் போலவே தீபாவளி, கிறிஸ்துமஸ்ஸையும் வாழ்த்துச் சொல்லி பகிர்ந்துக்கிறதும் காலங்காலமாக நடந்துட்டு இருக்கு.

காய்கறிச் சந்தைக்குப் போறதிலிருந்து தானியக்கொள்முதல் வரை எல்லா ஊர்க்காரங்களோட வெறும் வர்த்தக உறவு மட்டும் வச்சுக்கலை. ரொம்பவே அன்னியோன்யமாக ஒரு குடும்பமாகவே பழகுறதால மதச் சண்டைங்கிற பேச்சுக்கே இடமில்லை” என்கிறார்.

நல்ல விசயம்தானே!.

– இரா. கார்த்திகேயன், படங்கள் : சுதாகர்.

SMS Jokes Part – II

TEA STRONG
TEA STRONG AA IRUKA YENA PANANUM? ORU SPOON “CEMENT” PODANUM. 


which is the painful way of death?
which is the painful way of death? Poison, Murder, Accident!, Tsunami!!! DOnt worry. its simple very very simple. ”ur smile”. Good evening. 


Oru nimishathula 130 name solla mudiyuma?
Man 1: Oru nimishathula 130 name solla mudiyuma? Man 2: Mudiyadhu, niye sollu… Man 1: 100mohmed, 9thara, 6mugam, 7malai, 5ali, and 3sha. kooti PARU KANAKU SARIA VARUM 


BUMPER OFFER…
BUMPER OFFER… Enakku Thodarndhu SMS/E-mail Anuppinal Neengal Win Pannalam: 1st, $i.0 million car voda Photo 2nd, ’29’ inch colour TV’voda Carton Box 3rd, India Pogum Plane’kku BYE BYE kaatum vaaippu 4th, Mega Prize: BREAKFAST/LUNCH/DINNER.Unggal selavil/ Mundhungal!!!Hurry…Limted period offer innike matume!!!! 


Good MoRnInG
Hai! E Sollu!! E e e Sollu!! E e e e e e Sollu!! Nalla e e e e Sollu!! (Leave some spacing) ilichadhu podhum po poi palla velakkuga… Good MoRnInG…Have a nice day… 


U
The words which never complete without “u” D_b_kk_ Baekk_ Makk_ Loos_ Pisas_ Frad_ Blaed_ Kir_kk_ Idh_ epdi ir_kk_? HahaHaha 


coMPUTER tHIRUKKURAL
Here comes the coMPUTER tHIRUKKURAL.. 1.Bug kandupiditharae oruthal avar naana DeBUG seidhuvidal… 2.COPY PASTE seidhu vazhvaarae vazhvoarmattravarellam CODING seidhu saavaar. 3.emmozhi marandhaarkumJOB undaam JOB illai C i Marandhavarkku. 4.CHAT -tinil YAHOO.Chat seiga illaiyael CHAT-in CHATtaamai nandr.. 


Heart attackna enna theriyuma?
“Heart attackna enna theriyuma? Oru azhagana ponnu unna parththa-un blood heat aagum. Aval Sirithal- un bp increace aagum. Aval un pakathula vanthal-un heart beat raise aagum, face verkum, naakku ularnthu pogum. Aval thannoda azhagana lip sa open panni…… “Anna, Ghandi Parkuku entha busla poganumnu kekum bothu un heartla “Dum” nu oru satham kekkum paar, Athukku per thaan heart attack. 


Kadavul kitta
Kadavul kitta dress keten…Thuni kadaiye koduthar…. Sappadu keten..Hotele koduthar… Selavukku 5000 ketten… un cell number koduthar, epa varatum… 


Love Marriage
Love Marriage ikkum, Arrange marriage ikkum enna difference?? naamala kenuthula viluntha athu love marriage… 10 per thalli vitta athu arranged marriage.. 


Idi…minnal
Idi.. Minnal.. Mazhai.. puyal.. Vellam.. Poogambam.. ethu nadanthalum east.. west.. north.. south..enga irunthaalum, entha sim pottirunthaalum ennoda sms suma gilli…gilli….gilli maathiri vanthu GOOD Morning sollum..Hava a nice Day… 


Jatti Podu
“Muruganukku” Mottai podu, “Perumalukku” Naamam Podu, “Jesus”ku siluvai podu. My chellam, nee daily “jatti”podu, Marakkama “thovachi podu” 


Vadivelu Joke
Vadivelu: Hello, enna ithu? 601 ruba kadan vaangitu 106 ruba thareenga? Parthiban: Ithuthan kasana THIRUPPI tharadhu…… 


Pal vali vantha palla pudungalam
Pal vali vantha palla pudungalam….Ana… Kaal vali vantha kaala pudunga mudiyuma ?! Illa Thalai Vali Vandha, Thaliathan Pudunga Mudiyuma? 


Hand wash’nna kai kazhuvaradhu
Hand wash’nna kai kazhuvaradhu, ‘Face wash’nna mugam kazhuvaradhu, Appo ‘brain wash’ nna braina kazhuvaradhaa? 


Thooka marundhu sappitta thookam varum
Thooka marundhu sappitta thookam varum… Anaa…Irumal marundhu sappitta irumal varathu! (Enna kodumai saaar idhu) 


Tamil sms
Engineering Collegela padichu Engineer aagalaam, Presidency collegela padichu president aaga mudiyumaa?! 


ninnukittu dhaan saapidanum!
7 Paramparaikkku ukkanthu saapida paisa irunthalum… fast food kadaile ninnukittu dhaan saapidanum! 


Life la onnume illa na bore addikum
Life la onnume illa na bore addikum… Thalaila onnume ellana glare addikum…
Sardar was writing something very slowly.
Sardar was writing something very slowly. Friend asked: Why r u writing so slowly? Sardar: Im writing 2 my 6 yr old son, he cant read very fast.
Sardar proposed a Girl…… Girl said Im 1yr elder to you
Sardar proposed a Girl…… Girl said Im 1yr elder to you……….. Sardar said Oye No Problem Soniye,Ill marry you NEXT YEAR.

A sardarji Doctor falls in Love
A sardarji Doctor falls in Love with a Nurse.He writes a love letter to the Nurse :- I Love U sister….
Sardar on phone
Sardar on phone “Doctor my wife is pergnant.She is having pain right now”. Doctor: Is this her first child? Sardar: No this is her husband speaking…..
Boy and Girl Late To School
One day one boy and girl late to school. Teacher Asked Girl why were late, Girl: Sir i have lost my 1 rupee coin on the way while i am coming to school, i had searched for that for that i got late. Teacher asked boy why were u late, Boy says i am i am standing on that coin to hide.

teacher
teacher says; translate it into future tense i kill the man sardar says; you go to jail hhh